/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்து ஏற்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்
/
விபத்து ஏற்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்
விபத்து ஏற்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்
விபத்து ஏற்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யக்கோரி மறியல்
ADDED : பிப் 04, 2024 04:32 AM
மரக்காணம் : மரக்காணம் அருகே, பைக் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண், 27; கீர்த்தி, 27; கோகுல், 20; அனீஸ், 18; நால்வரும் கடந்த 31ம் தேதி நடுகுப்பத்திலிருந்து 2 பைக்குகளில் முருக்கேரியை நோக்கிச் சென்றனர்.
அப்போது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியுள்ளது. இதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து மரக்காணம் போலீசில், அளித்த புகாரில், காரில் வந்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 50; அய்யப்பன், 45; மற்றும் சுகுமார், 40; ஆகிய மூன்று பேரும் கொலை செய்யும் நோக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்தனர்.
அதன் பேரில், மாரிமுத்து, அய்யப்பன், சுகுமார் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 10.00 மணிக்கு நடுக்குப்பம் மாரியம்மன் கோவில் அருகே மாரிமுத்து, சுகுமாரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. உடன், போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை 11:00 மணியளவில் விரட்டியடித்தனர்.
மேலும், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.