
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, சி.இ.ஒ., அறிவழகன் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாபு ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். டி.இ.ஓ., மகாலட்சுமி வரவேற்றார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி 10 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 167 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்திப், நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட தலைவர் ஹரிஹரன், கண்காணிப்புக் குழு எத்திராசன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியை ராதா நன்றி கூறினார்.