/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு
/
அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு
ADDED : ஆக 06, 2025 12:39 AM
விழுப்புரம் : அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காலியிடங்களுக்கு சிறப்பு பொது கலந்தாய்வு நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு;
அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.பி.ஏ., பாடப்பிரிவில் 400 முதல் 200 வரையிலான கட் ஆப்பிற்கு நாளை (7ம் தேதி) 199 முதல் 140 வரையிலான கட்ஆப்பிற்கு, 8 ம் தேதி, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, சிறப்பு பொது கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பி.ஏ., அரசியல் அறிவியல் பாடப்பிரிவிற்கு, 400 முதல் 200 வரையிலான கட்ஆப்பிற்கு வரும் 11ம் தேதி, 199 முதல் 140 வரையிலான கட்ஆப்பிற்கு வரும் 12ம் தேதி கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இக்கல்லுாரியில், ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பித்த அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர் உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களோடு கலந்து கொள்ளலாம்.
இந்த கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை அந்தந்த துறையில் நிரப்பப்படாத காலி இடங்களுக்கு மட்டுமே நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

