நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கொரலுார் பழங்குடி இருளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள், சாலை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கொரலுார் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சீரமைக்க கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். பின், கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

