sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 வீடூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

/

 வீடூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

 வீடூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

 வீடூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை


ADDED : டிச 04, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை, கனமழை காரணமாக கடந்த அக்டோபர் 22ம் தேதி முழு கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 31.100 அடியை (534.528 மில்லியன் கன அடி) எட்டியது. இதையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி முதல் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் தினமும் 40 கன அடி திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து உள்ளது. நேற்று காலை 6:00 மணியளவில் அணையில் 29.00 அடி (391.384 மில்லியன் கன அடி) தண்ணீர் இருந்தது. மழை காரணமாக நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 940 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணை பாதுகாப்பு கருதி, 900 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருணகிரி தலைமையில் உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் அணைக்கு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மழை அதிகரிக்கும் நிலையில், அணையிலிருந்து கூடுதல் மதகுகளை திறந்து உபரி நீரை வெளியேற்ற உள்ளனர். இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us