/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு; டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு; டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு; டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு; டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : நவ 07, 2024 06:22 AM
விழுப்புரம்; விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் டிச., 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வானுார் தாலுகா, பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ. 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியள்ளதாக அமைச்சர் பொன்முடி உட்பட, 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட லோகநாதன் உடல்நலமின்றி இறந்தார்.
இந்த வழக்கில், 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், தற்போது வரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், 30 பேர் அரசு தரப்பிற்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தன் ஆகிய 3 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, கோதகுமார், ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை.
இவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க., வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நேற்று அரசு தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளவரசன், விசாரணையை வரும் டிச., 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.