sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அரசு அலுவலக வளாகங்களில் மழைநீர் தேங்கும் அவலம்

/

 அரசு அலுவலக வளாகங்களில் மழைநீர் தேங்கும் அவலம்

 அரசு அலுவலக வளாகங்களில் மழைநீர் தேங்கும் அவலம்

 அரசு அலுவலக வளாகங்களில் மழைநீர் தேங்கும் அவலம்


ADDED : ஜன 26, 2026 04:04 AM

Google News

ADDED : ஜன 26, 2026 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பெருந்திட்ட வளாகத்தில் கால்வாய் துார்ந்துள்ளதால், அரசு அலுவலக வளாகங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர், டி.ஐ.ஜி., - எஸ்.பி., உள்ளிட்ட அரசு துறைகளின் தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பெருந்திட்ட வளாகத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கால்வாய் பல இடங்களில் துார்ந்துள்ளது. இதனால், பெருந்திட்ட வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேற வழியில்லை.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் அதிகரித்துள்ளதால் அலுவலர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, பெருந்திட்ட வளாக அரசு அலுவலகங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us