ADDED : ஆக 21, 2025 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஜாதி, இன, வட்டார, மத பாகுபாடின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுகள், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடு படுவேன் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் பொதுமேலாளர் ரவீந்திரன், தலைமை நிதி அலுவலர் அனுசுயா, துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள் பங்கேற் றனர்.