/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : ஆக 13, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வி.அகரம் ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது வீடு எரிந்து சேதமானது. தகவல் அறிந்த லட்சுமணன் எம்.எல்.ஏ., நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். அரசு தொகுப்பு வீடு கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தாசில்தார் கனிமொழி, கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.