/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு ஓ.பி.ஆர்., பெயரை வைக்க கோரிக்கை
/
திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு ஓ.பி.ஆர்., பெயரை வைக்க கோரிக்கை
திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு ஓ.பி.ஆர்., பெயரை வைக்க கோரிக்கை
திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு ஓ.பி.ஆர்., பெயரை வைக்க கோரிக்கை
ADDED : ஜன 06, 2024 05:01 AM

விழுப்புரம் : திண்டிவனத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர்.பெயரை வைக்க வேண்டுமென, அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்டம், அனைத்து ரெட்டி(கஞ்சம்) நலச்சங்கத்தின் நிர்வாகிகள், திண்டிவனத்தில் அமைச்சர் மஸ்தானை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்
அதில்' திண்டிவனத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி பஸ் நிலையத்திற்கு, முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் பெயரை வைக்க வேண்டும். தமிழக அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்' என்ற கூறியுள்ளனர்.
தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மஸ்தான் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.