/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை மறியல்: போக்குவரத்து ஊழியர்கள் மீது வழக்கு
/
சாலை மறியல்: போக்குவரத்து ஊழியர்கள் மீது வழக்கு
ADDED : ஜன 24, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரத்தில் போக்குவரத்து கழக (சி.ஐ.டி.யு.,) ஊழியர்கள் சார்பில், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பணப்பலன் நிலுவை வழங்காத அரசை கண்டித்து  பொதுசெயலாளர் ரகோத்தமன் தலைமையில், வழுதரெட்டியில் சாலை மறியல் நடந்தது. அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 80 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.

