ADDED : ஆக 06, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே, மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சேதமானது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அமாவாசைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 58; விவசாயி.
இவரது கூரை வீடு நேற்று முன்தினம் மாலை மின் கசிவு காரணமாக திடீரென, தீப்பற்றி எரிய தொடங்கியது.
காற்றின் வேகம் காரணமாக தீ அதிக அளவில் பரவியதால், வீட்டில் வைத்திருந்த அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.