/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் கோவிலில் ரூ.98 லட்சம் உண்டியல் வசூல்
/
மேல்மலையனுார் கோவிலில் ரூ.98 லட்சம் உண்டியல் வசூல்
மேல்மலையனுார் கோவிலில் ரூ.98 லட்சம் உண்டியல் வசூல்
மேல்மலையனுார் கோவிலில் ரூ.98 லட்சம் உண்டியல் வசூல்
ADDED : அக் 16, 2025 02:29 AM

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ரூ. 98 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் என்னும் பணி நேற்று முன்தினம் நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் சக்திவேல், கள்ளக்குறிச்சி ரமேஷ் , அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேவார்த்திகள் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டனர். இதில் 98 லட்சத்து 63 ஆயிரத்து 347 ரூபாய் ரொக்க பணமும், 120 கிராம் தங்கமும், 920 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல்,சந்தானம், மேலாளர் சதீஷ், கணக்காளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.