sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏ.டி.எம்., மையத்தில் ரூ.50,000 அபேஸ்

/

ஏ.டி.எம்., மையத்தில் ரூ.50,000 அபேஸ்

ஏ.டி.எம்., மையத்தில் ரூ.50,000 அபேஸ்

ஏ.டி.எம்., மையத்தில் ரூ.50,000 அபேஸ்


ADDED : ஜூலை 30, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ஏ.டி.எம்., மையத்தில், ஏமாற்றி பணத்தை 'அபேஸ்' செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், திருச்சி சாலையை சேர்ந்தவர் பரசுராமன், 49; ஓட்டல் மேலாளர். இவர், அதே ஓட்டலில் பணிபுரியும் குப்புசாமி,35; என்பவரிடம், கடந்த 29ம் தேதி காலை தனது ஏ.டி.எம்., கார்டினை கொடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்து, 5000 ரூபாய் பணம் எடுத்து வரும்படி கூறினார்.

அவரும் விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பில் உள்ள ஒரு ஏ.டி.எம்.,மிற்கு சென்று பணம் எடுத்தார். ஆனால் அங்கு பணம் வராததால், அருகிலிருந்த நபர் அவருக்கு உதவுவது போல் நடித்து, அவரது ஏ.டி.எம்., கார்டை மாற்றிகொடுத்துவிட்டு, குப்புசாமியை ஏமாற்றி அனுப்பினார்.

சிறிது நேரத்தில், வேறு மையத்தில் மர்ம நபர், பரசுராமனின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.50,000 பணத்தை எடுத்து மாயமானார்.

இது குறித்து பரசுராமன் புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us