/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊரக வாழ்வாதார இயக்கம் கல்லுாரி சந்தை கண்காட்சி
/
ஊரக வாழ்வாதார இயக்கம் கல்லுாரி சந்தை கண்காட்சி
ADDED : ஜூலை 23, 2025 05:39 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கல்லுாரி சந்தை கண்காட்சி நடைபெற்றது.
தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், கல்லுாரி சந்தை கண்காட்சியை திறந்து வைத்தார். தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, 5 கல்லுாரியில் சந்தைகள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று துவங்கிய கண்காட்சி, நாளை வரை மொத்தம், 3 நாட்கள் நடக்கிறது. மாவட்டத்தின் 32 அரங்குகளோடு, கடலுார், மதுரை, நாமக்கல், விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களின் 46 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, விற்பனை செய்யவுள்ளதால் மாணவ, மாணவியர் தேவையான கைவினை பொருட்களை வாங்கி பயன்பெறலாம்.
இதன் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவது அனைத்து கல்லுாரி மாணவிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இதில், சப்-கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மாணவர் புல முதன்மையர் ராஜேஸ்வரி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.