ADDED : செப் 23, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் தளவானுார் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர்.
அங்கு, அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய தென்குச்சிப்பாளையம் குபேந்திரன், 26; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.