/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்
/
மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்
ADDED : டிச 06, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: தென் பெண்ணையாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று காலை 6:00 மணியளவில் சி.மெய்யூர் கிராம பகுதியில் உள்ள தென்பெண்ணையாறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோடினர். போலீசார் 6 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

