ADDED : நவ 05, 2025 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காணை சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார், நேற்று ஆயந்துார் கிராமத்தில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்த முயன்ற போது, டிரைவர் வாகனத்தை விட்டு விட்டு, தப்பி சென்றார்.
போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது.
பின், வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய ஆற்காடு கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் பூமிநாதன்,30; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

