ADDED : அக் 12, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருளமுதம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பேராசிரியர் சின்னதுரை நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். பேராசிரியர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.