ADDED : ஜூலை 30, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் முருகன் கோவில் சஷ்டி பூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வழிபாடு நடந்தது.
காலை 11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாரதனைக்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது.
இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கபட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.

