
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 14ம் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, சாணக்யா கல்விக் குழுமத் தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள்மொழி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை ஷாலினி வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா, விழுப்புரம் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி சுப்பராயலு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை சுருதி நன்றி கூறினார்.