sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திண்டிவனத்தில் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி

/

திண்டிவனத்தில் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி

திண்டிவனத்தில் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி

திண்டிவனத்தில் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி


ADDED : மே 30, 2025 04:31 AM

Google News

ADDED : மே 30, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனத்தில் நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பிளஸ் 1 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

திண்டிவனம், நல்லியகோடன் நகர், கோபால் தெருவைச் சேர்ந்த கேபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாஜலபதி, 16; இவர் திண்டிவனத்திலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தன்னுடைய நண்பர்களுடன், கர்ணாவூர் பாட்டையிலுள்ள தனியார் மனைப்பிரிவில் உள்ள கிணற்றில் குளித்துள்ளார். கிணற்றிலுள்ள முற்புதரில் சிக்கிய வெங்கடஜலபதி வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டார். உடனே திண்டிவனம் தீயணபை்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் நீரில் மூழ்கி இறந்த, மாணவரின் உடலை மீட்டு கொண்டு வந்தனர்.

சம்பவம் குறித்து மாணவரின் தந்தை கொடுத்துள்ள புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us