ADDED : ஜூலை 07, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: வயிற்று வலியால் அவதிப்பட்ட, 10ம் வகுப்பு மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனந்தபுரம் அடுத்த சங்கீதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மகள் ஸ்ரீமதி, 15; அதே ஊரில் உள்ள,
அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீமதி நேற்று காலை 7:00 மணிக்கு, விவசாய நிலத்தில் உள்ள அவரது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.