/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
/
பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
ADDED : மார் 16, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பிளஸ் 2 மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் மகள் தரணி, 16; விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
கடந்த 14ம் தேதி  வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

