/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : பிப் 26, 2026 05:05 AM

மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
சென்னை மருத்துவக் கல்லுாரி மருந்தியல் துறைத் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் பழனியப்பன், முதல்வர் அகிலா பழனியப்பன் பள்ளி இயக்குனர்கள் கீர்த்திவாசன், வேணு இளம்பரிதி முன்னிலை வைத்தனர். கலையரசன் வரவேற்றார்.
சென்னை மாநிலக் கல்லுாரி வேதியல்துறை பேராசிரியர் குமார், விக்கிரவாண்டி சூர்யா பார்மசி கல்லுாரி முதல்வர் அன்பழகன், சென்னை ஐ.ஐ.டி., முன்னால் பேராசிரியர் ஆழ்துறை, அண்ணா பல்கலைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு அறிவியல் அடைந்துள்ள முன்னேற்றம், குறித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து ஏ.டி.எல்., ஆய்வகத்தை திறந்து வைத்தனர். பள்ளி மாணவ மாணவியர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி,பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் நடராஜன், எல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பானுப்பிரியா தொகுத்து வழங்கினார். ஆய்வக பொறுப்பாளர் வரலட்சுமி நன்றி கூறினார்.

