நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஸ்கூட்டியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வானுார் அடுத்த இடையஞ்சாவடி-கோட்டக்கரை ரோட்டை சேர்ந்தவர் விநாயகம் மனைவி ரஞ்சினி, 29; இவர் கடந்த 13ம் தேதி இரவு தனது கடைக்கு முன்பு ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு, துாங்கச் சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது, ஸ்கூட்டியை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
மர்ம நபர் ஸ்கூட்டியை திருடிச்சென்றது தெரிய வந்தது.
ரஞ்சினி, புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்கூட்டி திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

