/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தில் எஸ்.பி., ஆய்வு
/
உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தில் எஸ்.பி., ஆய்வு
ADDED : பிப் 21, 2024 10:33 PM

விக்கிரவாண்டி : பெரியதச்சூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு செய்து புகார் மீது விசாரணை செய்து சமரசம் செய்துவைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் செயல்படுத்தும் விதமாக எஸ்.பி., தீபக் சுவாஜ்,நேற்று காலை பெரியதச்சூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது போலீஸ் ஸ்டேஷனில் செ.குன்னத்துாரை சேர்ந்த வசந்தி கொடுத்த புகாரின் பேரில் மனுவை பெற்ற, எஸ்.பி., அந்த புகார் மீது எதிர் மனுதாரர் சரசு என்பவரை அழைத்து விசாரணை செய்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.
டி.எஸ்.பி., சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.