sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

/

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : மார் 18, 2025 04:54 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரி தாவரவியல் துறை சார்பில், தாவரவியல் துறையில் புதுமை மற்றும் வளர்ந்து வரும் போக்குகள் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு, தாவரவியல் துறை தலைவர் தனம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் துறை தலைவர் தனஞ்செழியன் வாழ்த்திப் பேசினார்.

அண்ணாமலை பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் தனவேல் தொடக்கவுரையாற்றினார். இணைய வழி மூலம், ஆய்வு உரையினை சாம்பியா நாட்டின் தி காப்பர்பெல்ட் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் சுப்பையா ராமசாமி, சென்னை நந்தம்பாக்கம் ஆண்கள் அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் கந்தவேல், அமெரிக்கா மருந்தியல் பல்கலைக்கழக பேராசிரியர் பொன்மாரி ஆகியோர், தாவரவியலில் புதுமை மற்றும் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து உரையாற்றினர்.

ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுகலை, இளங்கலை மாணவர்கள் பலர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

ஏற்பாடுகளை பேராசிரியர் மணிகண்டன், பிரகாஷ், நடராஜன், உதவி பேராசிரியர் பரிமளா ஆகியோர் செய்திருந்தனர். மணிகண்டன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us