நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் வணிக நிர்வாகவியல் துறை மாணவியர்கள் கருத்தரங்கம் நடந்தது.
துறை பேராசிரியர் தரனேஸ்வரி வரவேற்றார். விழுப்புரம் ஆக்சிஸ் வங்கி அலுவலர் அஸ்வினி, வங்கி துறைகளில் தொழில்சார் திறன்கள் குறித்த தொழில் வளர்ச்சி என்ற தலைப்பிலும், வங்கி துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசினார்.
வங்கி தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் டிப்ளமோ படிப்புகளை மேற்கொள்ள பரிந்துரைத்த அவர், வங்கிகளில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் அவற்றின் பங்குகள் குறித்தும் விளக்கினார். வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் வாசுகி நன்றி கூறினார்.

