/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அக்கா கைது; செஞ்சி அருகே பயங்கரம்
/
சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அக்கா கைது; செஞ்சி அருகே பயங்கரம்
சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அக்கா கைது; செஞ்சி அருகே பயங்கரம்
சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அக்கா கைது; செஞ்சி அருகே பயங்கரம்
ADDED : ஏப் 26, 2025 09:47 AM

செஞ்சி: செஞ்சி அருகே சொத்து தகராறில் ஆபாசமாக பேசிய தம்பியை அடித்து கொலை செய்த அக்காவை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம், 65; இவரது மனைவி விஜயகுமாரி, 59; இவர்களுக்கு அம்சவேணி, 39; என்ற மகளும், மணிகண்டன், 36; என்ற மகனும் உள்ளனர்.
அம்சவேணி 15 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டு திண்டுக்கல் அடுத்த கோபால்பட்டியில் கணவருடன் வசித்து வருகிறார். எம்.பில்., படித்துள்ள மணிகண்டன் வேலை கிடைக்காமல் எலக்ரீஷியன் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ளவர். திருமணம் ஆகவில்லை.
சில மாதங்களுக்கு முன் காசிலிங்கத்திற்கு தாய் வழி பூர்வீக சொத்தில் 21 சென்ட் காலி மனை பாகமாக கிடைத்தது.
மணிகண்டன் குடிப்பழக்கதிற்கு அடிமையானதால் சொத்தை விற்பதற்கு காசிலிங்கம் தனது மகள் அம்சவேணிக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்திருந்தார். கடந்த 22ம் தேதி அம்சவேணி பெற்றோரை பார்க்க மேல்களவாய் வந்திருந்தார்.அம்சவேணிக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்திருப்பது குறித்து நேற்று முன்தினம்தான் மணிகண்டனுக்கு தெரியவந்தது.
இரவு 9:00 மணியளிவில் குடிபோதையில் பெற்றேரிடமும், அக்கா அம்சவேணியிடமும் மணிகண்டன் தகராறு செய்து ஆபாசமாக திட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த அம்சவேணி, அங்கிருந்த கட்டையால் மணிகண்டனை தாக்கினார்.
இதில் மயங்கி விழுந்த மணிகண்டனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழயில் அவர் இறந்தார்.
வி.ஏ.ஓ., ஓம்பிரகாஷ், 35; கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து நேற்று காலை அம்சவேணியை கைது செய்தனர்.

