ADDED : ஜூன் 12, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; வளவனுார் அடுத்த பள்ளிகெண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் ராஜேஷ், 27; இவர், புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜேஷ் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.