/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோட்டக்குப்பத்தில் சிறப்பு முகாம்
/
கோட்டக்குப்பத்தில் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 15, 2025 09:17 PM
கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பத்தில் நாளை சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நகராட்சி ஆணையர் புகேந்திரி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட, 27 வார்டுகளிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை சேர்மன் ஜெயமூர்த்தி தலைமையில், 1 முதல் 3 வது வார்டு வரை பெரிய முதலியார் சாவடி அரசு நடுநிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது.
தொடர்ந்து வரும் 24ம் தேதி 4, 5 வார்டுகளுக்கு, சின்ன முதலியார்சாவடி சமுதாய நலக்கூடத்தில் முகாம் நடைபெறுகிறது.
இதில், நகராட்சியுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்துறை அலுவலர்களும் பங்கேற்று, மனுக்களை பெற உள்ளனர். பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.