/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாரா கடன்களை வசூலிக்க சிறப்பு கடன் தீர்வு திட்டம்
/
வாரா கடன்களை வசூலிக்க சிறப்பு கடன் தீர்வு திட்டம்
ADDED : டிச 04, 2024 08:00 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் வசூலாகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை கடன்கள், சிறப்பு கடன் தீர்வு திட்டம் ஒரே தவணையில் செலுத்தலாம்.
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பெரியசாமி, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் ஆகியோரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் தவணை தவறிய பண்ணை கடன்கள், சிறப்பு கடன் தீர்வு திட்டத்தில் முழு தவணை தவறி மூன்றாண்டுகளுக்கு மேலாக மத்திய கால வேளாண் கடன்கள். பயிர் கடனாக வழங்கப்பட்டு மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்த கடன்கள். பண்ணை சார்ந்த நீண்டகால கடன்கள், சிறுதொழில் கடன்கள். மற்றும் மகளிர் தொழில் முனைவோர் கடன்களை தீர்வு செய்யும் நாள் வரை 9 சதவீதம் சாதாரண வட்டியோடு, நிலுவை தொகையை வரும் மார்ச் 12ம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம்.
தவணை தவறிய அந்த கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது.
கடன்தாரர்களின் வட்டி சுமையை குறைக்கும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி 9 சதவீதம் சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவை தொகையை ஒரே தவணையில் செலுத்தி, தங்களின் கடன்களை தீர்வு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.