ADDED : செப் 08, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் நாளை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நாளை 10ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
ஆர்.டி.ஓ., தலைமை தாங்கி குறைகளை கேட்றிகிறார். இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
