/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு
/
அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு
ADDED : செப் 03, 2025 08:52 AM
விழுப்புரம்; அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காலியிடங்களுக்கு சிறப்பு பொது கலந்தாய்வு நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு:
அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.காம்., - பி.பி.ஏ., - பி.ஏ., அரசியல் அறிவியல் பாடப்பிரிவிற்கு சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. 400 முதல் 140 வரையிலான கட்ஆப்பிற்கு காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை, சிறப்பு பொது கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இக்கல்லுாரிக்கு, விண்ணப்பித்த அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உரிய அசல், நகல் சான்றிதழ்களோடு கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.