/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெய்வானை அம்மாள் கல்லுாரியில் விளையாட்டு போட்டி
/
தெய்வானை அம்மாள் கல்லுாரியில் விளையாட்டு போட்டி
ADDED : ஆக 04, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் துறைகளுக்கிடையேயான கைப்பந்து, கோ கோ உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அகிலா தலைமை தாங்கி, பரிசு, வழங்கி பாராட்டினார்.
புல முதன்மையர் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
இப்போட்டியில் 250 மாணவிகள் பங்கேற்றதில் 60 பேர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர். மாணவியர் பேரவை தலைவர் ஜமீன் மிஹராஜி வரவேற்றார்.
மாணவியர் விடுதி செயலாளர் ஜெயபாரதி நன்றி கூறினார்.