/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் துவக்கம்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 15, 2025 09:14 PM

விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சியில் 16,17 வார்டுகளுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் துவக்க விழா, காவலர் சமுதாய மண்டபத்தில் நடந்தது.
லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். மாவட்டத்தில், 291 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதில், 23 முகாம்கள் ஊரக பகுதிகளிலும், 55 முகாம்கள் நகர பகுதிகளிலும் நடக்க உள்ளன. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நகர்புற பகுதிகளில் 21 முகாம்களும், ஊரக பகுதிகளில் 81 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், நகரில், 13 அரசு துறைகளை சேர்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
ஊராட்சி பகுதிகளில் 10 ஆயிரம் என்ற மக்கள் தொகை அடிப்படையில் ஒரு முகாமும், நகர் பகுதிகளில் 5 வார்டுகளுக்கு இரு முகாம்களும், பேரூராட்சிகளில் இரு முகாம்கள் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் மொத்தம், 291 முகாம்கள் நடக்க உள்ளன.
மேலும், இங்கு மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்பு உட்பட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், மக்களுக்கு விண்ணப்பம் எழுதி தர தன்னார்வலர்கள் பணியில் இருந்தனர்.
முகாமில் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று கோரிக்கைகளை விண்ணப்பமாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் பத்மஜா, நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி பிரபு, முன்னாள் சேர்மன் ஜனகராஜ், கவுன்சிலர்கள் மெரினா சரவணன், ஜெயந்தி மணிவண்ணன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.