sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

/

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்


ADDED : ஜூலை 15, 2025 05:17 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 15ம் தேதி நடக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், பொது மக்கள் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிக்கை:

தமிழக அரசின் பல்வேறு சேவைகள் அனைத்து மக்களையும் நேரடியாக சென்றடைவதற்காக, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வரும் 15ம் தேதி துவங்குகிறது.

விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், வானுார் சட்டசபை தொகுதிகளிலும் இந்த முகாம்கள் நடக்கிறது. தி.மு.க., அரசால் முகாம்கள் நடத்தப்படுவதை மக்கள் உணரும் வகையில், கட்சியினரின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

குறிப்பாக, முகாம்கள் நடக்கும் இடம், நாள் ஆகியவற்றை கட்சி சார்பில், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முகாம் நாள், இடம் விபரங்கள் 5 நாட்களுக்கு முன்பாகவே அந்தந்த நகர, ஒன்றிய பேரூர் கழக செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். முகாம் நடக்கும் இடங்களுக்கு பொது மக்களை அழைத்து வரும் பணியை கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்.

முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து, மக்களுக்கு விண்ணப்பங்களை எழுதி தருதல், அலுவலர்களிடம் அழைத்துச் சென்று உதவும் பணிகளை கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்.

நகர, ஒன்றிய, பேரூராட்சி சார்பில், முகாம்கள் நடக்கும் இடங்களில், பொது மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் உரிய வசதிகளை செய்து தர வேண்டும். முகாம் படங்களை தலைமைக்கு அனுப்பியும், சமூக வலை தளங்களிலும் பதிவிட வேண்டும்.

தமிழக அரசு துறைகள் இணைந்து நடத்தும் இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us