/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
/
மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மார் 07, 2026 05:10 AM

விழுப்புரம்: தமிழ்நாடு மல்லர் கம்ப கழகம் சார்பில், மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடந்தது.
திருச்சி, பொன்மலைப்பட்டி துாய இருதய பள்ளியில், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடந்த போட்டியில், விழுப்புரம் நகராட்சி துவக்கப் பள்ளி மாணவி சாத்விதா, மாணவர் கோபி முதல் பரிசும், 12 வயதுக்குட்டோர் பிரிவில் மாணவி மோனிதா இரண்டாம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு, திருச்சி மாவட்ட மல்லர் கம்பம் கழகம் சார்பில், சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழுப்புரம் நகராட்சி துவக்கப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கீதா பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் கோமதி, ஜோஸ்பின், திவ்யா ஞானாமிர்தம், அருள்மணி கெசியாக பியூலா, பரிதா, மகாதேவி, சசிரேகா, மஞ்சுளா உட்பட பலர் பங்கேற்றனர்.

