ADDED : நவ 15, 2024 05:02 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த மாநில அளவிலான ஊஷூ போட்டியில், வேலுார் மாவட்டம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கம் தரம்சந்த் ஜெயின் பள்ளியில், 2024-25ம் ஆண்டிற்கான மாநில அளவிலான 21வது சப் ஜூனியர் ஊஷூ போட்டி இரண்டு நாட்கள் நடந்தது. 28 மாவட்டங்களில் இருந்து 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் சண்டை பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் கோவை இரண்டாமிடமும், சென்னை மூன் றாம் இடமும் பிடித்தது.
தவுலு பிரிவில் வேலுார் முதலிடமும், சேலம் இரண்டாம் இடமும், திண்டுக்கல் மூன்றாம் இடமும் பிடித்தனர். ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வேலுார் மாவட்டம் பெற்றது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தரம்சந்த் ஜெயின் பள்ளி தலைவர் பப்ளாசா, பொருளாளர் நவீன் குமார், இன்டர்நேஷனல் ஜட்ஜ் பிரதியுமான், ஒடிசா பஷீரா, கேரளா சபீர் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர்.
தமிழ்நாடு ஊஷூ அமைப்பின் மாநில துணை தலைவர் ஜின்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.