/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம்
/
அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம்
அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம்
அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : அக் 28, 2025 11:50 PM
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில், தமிழக அரசு அறிவித்துள்ள போக்குவரத்துக் கழகம் தொடர்பான அரசு திட்டங்கள் குறித்த பணிகள் மேம்பாடு. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பஸ் பயண அட்டை பணிமனைகள், அலுவலகங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி. சிறப்பு பஸ்கள் இயக்கம் ஆகியவை குறித்து விரிவாக விவாதித்து, பணிகள் மேம்பட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அனைத்து பஸ்களையும் முறையாக இயக்கி வருவாயை மேம்படுத்தவும், அனைத்து நிலைகளிலும் முதன்மையாக திகழ அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மேலாண் இயக்குநர் அறிவுறுத்தினார்.
பொது மேலாளர்கள் ரவீந்திரன், ஜெகதீஸ், பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், துரைசாமி உட்பட மண்டல துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் பங்கேற்றனர்.

