ADDED : அக் 28, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஸ்ரீதர், 39; இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மாலை மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர், மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

