/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
/
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 20, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
எண்ணும் எழுத்தும் சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமூக விழிப்புணர்வு, மாணவர் சேர்க்கை மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
தலைமை ஆசிரியர் சுகந்த ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவர்கள் குழு பாடல், வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.