ADDED : ஜன 02, 2025 07:22 AM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் இறந்தார். விழுப்புரம் அடுத்த கெடார் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சேட்டு; டிராக்டர் டீலர். இவரது மகன் லிங்கேஸ்வரன்,20: விழுப்புரத்தில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று தனது பைக்கில், அதே ஊரை சேர்ந்த நண்பர் குகன் ,19, என்பவருடன் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்றனர்.
பகல் 12.00 மணிக்கு விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே ஓட்டல் எதிரே பைக் சென்ற போது, சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் , பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் லிங்கேஸ்வரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பலத்த காயமடைந்த குகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.