/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் டயர் வெடித்ததில் மாணவி கால் முறிவு
/
பஸ் டயர் வெடித்ததில் மாணவி கால் முறிவு
ADDED : மார் 19, 2025 04:49 AM
மயிலம், : மயிலம் அருகே பஸ் டயர் வெடித்ததில் கல்லுாரி மாணவி காயமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகள் பார்வதி, 18; விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து வீட்டிற்கு தனியார் பஸ்சில் சின்ன நெற்குணத்திற்கு வந்து கொண்டிருந்தார். மாலை 6:00 மணிக்கு செண்டூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சின் பின்பக்க வலதுபுற டயர் திடீரென வெடித்தது.
இதில் பஸ் உள்ளே அமர்ந்து வந்த பார்வதிக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.