/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுப்பிரமணிய சுவாமி தங்க கவச அலங்காரம்
/
சுப்பிரமணிய சுவாமி தங்க கவச அலங்காரம்
ADDED : பிப் 02, 2026 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் சிவ, விஷ்ணு கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சிவ, விஷ்ணு கோவில், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த னர்.

