/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏட்டு துாக்குபோட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு
/
ஏட்டு துாக்குபோட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு
ஏட்டு துாக்குபோட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு
ஏட்டு துாக்குபோட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 30, 2025 03:09 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தலைமை காவலர் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலை, அசோக் நகரை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் முருகன், 50; இவர், திருக்கோவிலுார் போலீஸ் நிலைய தலைமை காவலர். இவர் மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். முருகனுக்கு, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, சாலை விபத்து ஏற்பட்டு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உடல்நல பாதிப்பால், பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில், முருகன், நேற்று காலை 8.30 மணிக்கு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், தலைமை காவலர் முருகனுக்கு, தலையில் காயம் ஏற்பட்டதால் சற்று மனநலம் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். விழுப்புரத்தில் தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.