sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தமிழக விவசாயிகள் வீரவணக்க ஊர்வலம்

/

தமிழக விவசாயிகள் வீரவணக்க ஊர்வலம்

தமிழக விவசாயிகள் வீரவணக்க ஊர்வலம்

தமிழக விவசாயிகள் வீரவணக்க ஊர்வலம்


ADDED : ஜூலை 06, 2025 04:31 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க ஊர்வலம் நடந்தது.

விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த போராட்டத்தில் வீர மரணம் அடைந்த 59 உழவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் செஞ்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க ஊர்வலம் நடந்தது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ், கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினா்.

மாவட்ட அவைத் தலைவர் ஏழுமலை, செயலாளர் தங்கராசு, அமைப்பு செயலாளர் அருண்பாண்டியன், மகளிர் அணி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள் சிலம்பரசன், தாமரைக்கண்ணன், உதயகுமார், சரவணன், தியாகு பழனி, சிவக்குமார், ஏழுமலை, கோகுல் மற்றும் செஞ்சி, வல்லம், மேல்மலையனுார் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஊர்வலம், செஞ்சி மார்க்கெட் கமிட்டி முன் துவங்தி, திண்டிவனம் சாலை, கூட்ரோடு வழியாக திருவண்ணாமலை ரோட்டில் முடிந்தது.

ஊர்வலத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் ஆதார விலை நிர்ணயம் செய்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண்மை மின்சார திட்டத்தை ரத்து செய்ய முடியாத வகையில் தனி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

பூந்தோட்ட மின் இணைப்புகள் அனைத்தையும் கட்டணமில்லாமல் வேளாண்மை உரிமை மின்சார இணைப்புகளாக மாற்றிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்றனர்.






      Dinamalar
      Follow us