ADDED : ஜன 16, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி தமிழ்ச் சங்க ஆண்டு விழா நடந்தது.
ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் கவிதாஸ் வரவேற்றார். ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கினார்.
தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினர் சிவா, சையது உஸ்மான் வாழ்த்திப் பேசினர்.
பேராசிரியை எழிலரசி தலைமையில் மாணவர்களின் வெற்றிக்கு பெரிதும் துணை நிற்பவர்கள் ஆசிரியர்களா, பெற்றோர்களா தலைப்பில் பட்டி மன்றமும், ராஜா, விஜயாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
நிர்வாகிகள் தேவமூர்த்தி, முருகன், ஜெய்சங்கர், அம்பேத்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொதுச் செயலாளர் ஆல்டிரின் நன்றி கூறினார்.