நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் தலைவலியால் பாதித்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம், வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சுந்தரமூர்த்தி,25; இவர் தீராத தலைவலியால் சிரமப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.